சென்னை, ஜூன் 3- தமிழக அரசு பிறப்பித்துள்ள வேளாண் அவசரச்சட்டத்தில் புதி யதாக ஒன்றும் இல்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண் விளை பொருட்கள் விற்பனை (ஒழுங்குப் படுத்துதல்) சட்டம் 1987-ல் சில சீர் திருத்தங்களை குறிப்பிட்டு தமி ழக அரசு செவ்வாயன்று அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எவரி டம் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று அறி வித்துள்ளது. ஏற்கனவே நடை முறையில் உள்ள வழக்கத்திற்கு ஒரு சட்ட வடிவத்தை அரசு கொடுத்துள்ளது. விவசாயிகளிட மிருந்து விற்பனை கட்டணம் வசூ லிக்கப்படாது என்பதை தவிர இந்த அவசர சட்டத்தில் புதியதாக ஒன்றும் இல்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருது கிறது. வேளாண் விளை பொருட்க ளுக்கு குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிக்காமல் வியா பாரிகளையே நம்பியிருக்க வேண் டிய நிலைக்கு விவசாயிகளை வைத்து விட்டு இத்தகை சிறு அளவிலான சீர்த்திருத்தங்களால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற் படாது என்பதை அரசுக்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.