tamilnadu

விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை

சென்னை,மே 28- விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரி களுக்கு எந்த தடையும் இல்லை என்றுசென்னை உயர்நீதிமன்றம் தெரி வித்துள்ளது.சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமையில், அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2006 ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரியும்  வரைமுறை செய்ய கோரிய மனு குறித்து முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ஜெகநாதன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு முன்பு நடைபெற்றது. வரை முறைப்படுத்தகோரி மனு தாரர் அளித்த விண்ணப்பம் சென்னை பெருநகர வளர்ச்சி  குழு மத்தின் பரிசீலனையில்  உள்ளதாகவும், நீதிமன்ற அனுமதியின்றி எந்த இறுதி முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும்  அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பின்னர் நீதிபதிகள் கூறுகையில், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. இருப்பினும், வரைமுறைப்படுத்தக் கோரி விண்ணப்பித் திருந்தாலும், விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என்று கூறிநீதிபதிகள், வழக்கை முடித்து வைத்த னர்.