சென்னை, ஆக. 23 - நாம் தமிழர் கட்சி யின் இளைஞர் பாச றை மாவட்டச் செய லாளராக இருந்த சிவ ராமன் (30) பாலியல் வழக்கில் கைது செய் யப்பட்டதை அடுத்து அவர், நாம் தமிழர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். தற்போது சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு இறந்த தாக கூறப்படும் நிலையில், “பள்ளி மாண வியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணம் தற் கொலை தான்” என நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்றும் கூறி யுள்ளார். சிவராமன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் கூறி வந்த நிலை யில் நாம் கட்சி தலைவர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.