tamilnadu

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லையாம்: வைத்திலிங்கம் கூறுகிறார்..

சென்னை:
அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.அதிமுக செயற்குழு கூட்டம் திங்களன்று சென்னையில்  5 மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பொதுச்செயலாளர் தேர்வு,  முதலமைச்சர் வேட்பாளரும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப் பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் செவ்வாயன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வைத்திலிங்கம், செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என இருவருக்கும் நான் ஆதரவாளனாகவே இருக்கிறேன் என்று கூறினார்.