சென்னை,ஜன.9- தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
பொதுத்தேர்வு முடிவுகள் முறையே மே 10, 14, 6 ஆம் தேதியில் வெளியிடப் படுகிறது. மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் பொதுத் தேர்வு பாதிக்கப்படுமா என்ற சந்தே கங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறு கையில்,“பொதுவாகவே தேர்தல் தேதி அறிவிக்கும் போது ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற் போல் அறிவிக்கப்படும். இது வழக்கமான ஒன்று. ஏனென் றால் இது மாணவர்கள் நலன் சார்ந்தது. மார்ச் மாதம் துவங்கும் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஒரு வருடமாக தயாராவார்கள் என்ப தால், தேர்வு தேதிக்கு தகுந்தாற் போல தேர்தல் தேதி அமையும்” என்றார். செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், “ஜாக்டோ - ஜியோ குழுவினர் 12 வித மான கோரிக்கைகளை வைத்துள் ளார்கள்.
இது தொடர்பாக ஆலோ சனை நடத்தினோம். அதில் எடுக்கப் பட்ட முடிவுகளை முதல்வர் மற்றும் நிதித்துறை கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.