“தமிழ்நாடு அரசு கோரிய நிதி, எந்த பேரிடருக்கும் ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை. ஏறத்தாழ ரூ.1.05 லட்சம் கோடி வரை தமிழ்நாடு அரசு செலவு செய்திருக்கிறது. இவ்வளவு நிதியை செலவிட்டதால், மாநில அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி, நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசு, தொடரக் கூடாது” என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார்.