சென்னை, ஜூன் 1-மாநிலத் தலைமை தகவல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அதன்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வெங்கடேசன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் தேடுதல் குழு புதிய தலைமை தகவல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.