tamilnadu

img

ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது: முதல்வர் பேட்டி

சென்னை,பிப்.7- ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், புதிய நிறுவனங்களை வரவேற்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜன. 27ஆம் தேதி ஸ்பெயின் சென்றார். அங்கு நடை பெற்ற பல்வேறு சந்திப்புகளின் போது,  பிரபலமான ஹபக்லாய்டு நிறுவனத்து டன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறு வனமான அபர்ட்டிஸின் பன்னாட்டு மற்றும் நிறுவனத் தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோவையும் முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்.  

அப்போது, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடு களை மேற்கொள்ள அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி  முதலீடு செய்வதாக உறுதியளித் துள்ளது. ஆக்சியானா நிறுவனம் முதலீடு செய்ய உறுதியளித்தது.

மேலும் அம்போவால்வ்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிறுவனங்களும் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.  ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் புதனன்று (பிப்.7)சென்னை  விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை அமைச்சர்கள் மற்றும்  திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,“ ஸ்பெயின் பயணத்தில் ஹபக்லாய்டு நிறுவனம் ரூ. 2500  கோடிக்கு முதலீடு செய்ய  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள் ளப்பட்டன.

எடிபான் நிறுவனம் ரூ. 540  கோடியும், ரோக்கா நிறுவனமும் ரூ.400  கோடியில் முதலீடு செய்ய புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  மேலும் ஆக்சியானா, ரோக்கா,  ஹபக்லாய்டு, அபர்ட்டிஸ், கெஸ்டாம்ப், டால்கோ, எடிபான், மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்களும் தமிழ் நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்கிறது” என்றார்.

பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்!...
இந்த சந்திப்பின் போது, மக்கள வையில் பிரதமர் உரையாற்றியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பாஜகதான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கி ரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பேசிக் கொண்டி ருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது”என்றார்.

அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, “திட்டமிடும்போது உங்களி டம் கண்டிப்பாக தெரிவிப்போம். மக்களவைத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.

வருகிற மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று பிரதமர் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.