tamilnadu

கனிம வளங்களை எடுப்பதற்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது

சென்னை, அக்.1- தர்மபுரி மாவட்டத்தில் கனிம வளங் களை எடுப்பதற்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என  சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காப்பர், இரும்பு, கருப்பு கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. இந் நிலையில் தர்மபுரி மாவட்டத்தின்  பென்னா கரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூன் 3 தேதி வெளியிட்டார். அதில் டெண்டர் எடுப்பதற் கான கடைசி தேதி செப்.28  என தெரிவிக்கப் பட்டிருந்தது. முன்னதாக, கருப்பு கிரானைட் எடுப்ப தற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும் அதன் பின்னர் தான் மாநில அரசு அறி விப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால் இந்த விதிகள் எதையும் பின்பற்றாமல் தமிழக அரசு வெளியிட்டுள்ள ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய ஏல அறிவிப்பை விதிகளை பின்பற்றி வெளியிடக் கோரி  தர்மபுரி முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினரான தாமரைச்செல் வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப் பில் மூத்த வழக்கறிஞர் ஆர். விடுதலை  ஆஜ ராகி முறையான வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அனுமதி பெறாமல் இந்த டெண் டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது குறுக் கிட்ட அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், முறையான விதிகளுக்கு உட்பட்டு தான்  அறிவிக்கப்பட்டது எங்ன றும், டெண்டரை  எடுப்பவர்கள் சுற்றுச் சூழல் உள்ளிட்ட ஆறு அனுமதிகளை பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக வும், இதில் எந்த ஒரு விதிமுறை மீறலும் இல்லை  என்றும் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இது குறித்து  விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை  டெண்டரை இறுதி செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.