சென்னை,ஜூன் 10- தமிழக கோவில்களில் உரிய அனுமதி யின்றி நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்ட ணம் உள்ளிட்டவற்றை வசூலித்தால் குற்ற வியல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளை யம் பவானி அம்மன் கோவில் அறங்காவ லர் சேதுராமன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தி ருந்தார். அதில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களி டம், அப்பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர், வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய அனுமதியின்றி கட்டணம் வசூலிப்ப தாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு திங்களன்று(ஜூன்10) விசார ணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப் பட்டது. மேலும் தமிழக கோவில்களில் சட்ட விரோதமாக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூ லிப்பதை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், 30 நாட்களுக்குள் சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார். எவ்வித அனுமதியுமின்றி நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் ஆகிய வற்றை வசூலிப்பவர்களை கண்கா ணித்து, அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு எடுக்கப் பட்ட நடவ டிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கோட்டாட் சியர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக கட்டணம் வசூ லிப்பவர்கள் மீது சிவில் மற்றும் குற்ற வியல் நடவடிக்கைகளை காவல்துறை யினர் எடுக்க வேண்டும் என உத்தர விட்டுள்ள நீதிபதி, நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் அதற்கான விளைவு களை சந்திக்க நேரிடும் எனவும் எச்ச ரித்துள்ளார். மேலும் கோவில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் மற்றும் உரிய அனு மதி பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூ லிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வசூ லிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தி யது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தர விட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.