tamilnadu

புழல் ஏரியும் வறண்டது: குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தம்

சென்னை, ஜூன் 9- சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வரும் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் ஏற்கனவே வறண்ட நிலையில் தற்போது, புழல் ஏரியும் வறண்டது. புழலிருந்து சென்னைக்கு ஓரளவு குடிநீர் விநி யோகிக்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் தடைபடும் சூழல் உருவாகி யுள்ளது. சென்னையில் கோடை காரணமாகவும், போதிய மழை பெய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய முக்கிய ஏரிகள் போதிய தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இரவில் தண்ணீர் தேடி அலைய வேண்டியுள்ளதால் பகலில் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்றும், அன்றாட பணிகளை சரிவர செய்ய முடிவதில்லை என்றும் மக்கள் குமுறு கிறார்கள். சென்னையில் ஆண்டு தோறும் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நிரந்தரமாக ஒரு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.