கோவை,டிச.17- பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக ஒன்றிய அரசு தனியார் சர்வே நிறுவனத்துடன் இணைந்து எடுக்கும் சர்வே பெரும்பாலும் தவறுகளாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம்சாட்டினார்
. கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரி யில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “அரசுப் பள்ளிகளில் கற்போம் கற்பிப்போம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆய்வுக் கூடங்களில் மாணவர்களால் கண்டு பிடிக்கப்படக் கூடிய கண்டுபிடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த செயல் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கல்வித்துறையில் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது” என்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிகளில் ஏற்கனவே உள்ள ஆய்வுக்கூடங்களில் நவீன மய மாக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களாக மாற்றுவதற்கான முயற்சி செய்யப் பட்டு வருகிறது.
அனைத்து வசதிகளு டன் கூடிய ஆய்வுக்கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 11 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அந்த வசதி அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதங்கள் அதி கரிக்கப்பட்டு வருகிறது.
மன அழுத்தம் இல்லாமல் மாணவர் களும் ஆசிரியர்களும் சாதனை புரிவதற்கு காரணம் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுதான். பள்ளிகளில் படிக்கக்கூடிய மாண வர்கள் சரியாக படிக்கிறார்களா? என்று ஆய்வு நடத்துவதற்காக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன் அதன்படி 2000 பேர் தங்களுடைய பள்ளிக்கு வருகை தர வேண்டும் என கூறியிருந்தார்கள் அவர்கள் அனைவரையும் பார்க்கக்கூடிய நேரம் இன்மை காரணமாக அலு வலர்களை சென்று பார்க்க வேண்டும் என கூறியிருந்தேன்.
அதன்படி அவர்கள் செல்ல இருக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி தொடர்பாக ஒன்றிய அரசு தனி யார் சர்வே நிறுவனத்துடன் இணைந்து சர்வே எடுக்கிறார்கள். அது பெரும்பாலும் தவறுகளாக உள் ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்த ஒரே அரசு தமிழ்நாடு அரசுதான். அனைத்து பள்ளிகளுக்கும் ஆர்டிபிசியில் இன்டெலிஜென்ஸ் மூலம் தொழில் நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.