செப்.24 சென்னையில் போராட்டம்
ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநில அரசு அமல்படுத்துவது, வரிகள் உயர்வு, உள்ளாட்சி பணிகள் தனியார்மயம், தூய்மை பணியாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.24 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கட்சியின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில் குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி, மாதர் சங்க பகுதிச் செயலாளர் விஜயா உள்ளிட்டோர் பேசினர்.
சென்னை, ஆக. 29 - பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும், தனியார்மயத்தை கைவிட்டு, தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், சாலையோர வியாபாரிகளை அகற்றக் கூடாது, மாநகராட்சியில் உள்ள லஞ்ச லாவன்யத்தை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஆக.29) தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் என்.குணசேகரன் பேசியதாவது:
மாநகராட்சியாக நிலை உயர்த்தினால் தான் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும் என்றார்கள். மாறாக, 175 விழுக்காடு அளவிற்கு வரிகளை உயர்த்திய பிறகும், அடிப்படை பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசின் வரி உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. உள்ளாட்சி கூட்டங்களிலும் சிபிஎம் உறுப்பி னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெளி நடப்பு செய்தனர்.
மக்களை கடுமையாக பாதிக்கக் கூடிய வகையில் வரி உயர்வு இருக்க கூடாது என்று முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது. வரிகளை உயர்த்தினால் தான் மானியத்தை வழங்குவோம் என்று ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது. எனவே, வரிகளை உயர்த்துவதாக மாநில அரசு கூறுவது ஏற்புடையதல்ல.
ஒன்றிய அரசின் நிர்பந்தங்களுக்கு மாநில அரசு அடிப்பணியக் கூடாது. மாறாக மக்களை திரட்டி போராட வேண்டும்.வரி உயர்வு செய்யும் போது மக்களோடு கலந்தா லோசிக்க வேண்டும். வசதி படைத்த வர்களுக்கு கூடுதலாகவும், ஏழைகளுக்கு குறைவாகவும் வரி நிர்ணயிக்க வேண்டும்.
உள்ளாட்சிகளில் நடைபெறும் ஊழல், லஞ்சம், முறைகேடுகளை மக்கள் சகித்துக் கொள்ள முடியாமல் மக்கள் போராடு வார்கள். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும், அரசு தனிமைப்படும். ஒன்றிய அரசின் தனியார்மயம் கொள்கையையே மாநில அரசும் அமலாக்கக் கூடாது. மக்கள் பிரச்சனை, கொள்கை பிரச்சனைகளை முன் வைத்து நடைபெறும் இந்த போராட்டம், மாநகராட்சிகள் தோறும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.