2020 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளிடம் தாலி மற்றும் ஆபரணங்கள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவிற்கு தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 2017 ஆம் முதல் மறுத்து படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததது. அதில், மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது, பர்ஸ் இருக்கக்கூடாது, கைக்கடிகாரம் அணியக் கூடாது என விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளால் ஆண்டு தோறும் மாணவ மாணவியர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இது குறித்து சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒற்றை தாக்கல் செய்துள்ளார். தேர்வில் கலந்து கொள்ளலும் திருமணமான விண்ணப்பதாரர்கள் தாலி, மெட்டி, காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கப்படுவதாக மனுவில் கூறியிருந்தார்.
தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால் இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவேண்டும். ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்கக்கூடாது என உத்தரவிடவேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டு துறை, பொது சுகாதார சேவை இயக்குனர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு ஆகியவற்றிற்கு உத்திராவிடப்பட்டுள்ளது.