சென்னை, மார்ச் 1- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் துவக்கப் பட்ட மத்திய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் நிறு வனத்தை மூட நடந்துவரும் முயற்சியினை கண்டிப்பதுடன் அதனை தடுத்து நிறுத்த சமூ கத்தின் அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும் என மக்கள் நல்வாழ்வு கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு மூலம் எச்.பி.எல். நிறுவனம் மூலம் மிகப்பெரிய உயிர் காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவுசெய்யப் பட்டது. பொருளா தார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு “தேசிய முக்கியத்துவ திட்டம்” என்று இதற்கு ஒப்புதல் அளித்தது. நாட்டின் தடுப்பூசி தேவையில் 75விழுக்காடு எச்பிஎல் நிறுவனத்தி டம் இருந்து குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளப்படும். மீதமுள்ள தடுப்பூசி மருந்து களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப் படும் என எச்.பி.எல். நிறுவனத்திடம் அரசு சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பணிகளில் பயோ டெக்னாலஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாம தமானதால், 2017ம் ஆண்டில் ரூ.710 கோடியாக வும், 2019ம் ஆண்டில் ரூ.904.33 கோடியாகவும் திட்டச் செலவு அதிகரித்தது. மீண்டும் திருத்தப் பட்ட ரூ.904.33 கோடியாகத் திட்டச் செலவு விரி வாக்க அறிக்கையை 2018ம் ஆண்டு சமர்ப் பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் திட்டத்தின் முன்மொழிவு சாத்தியமில்லை எனக்கூறி நிதி ஒதுக்க முடியாது என தெரிவித்து இத்திட் டத்தை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கண்ட நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. மேலும் பல ஊழியர்கள் வேறு இடங்களுக்குக் கட்டாயமாக பணியிடை மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். இதில் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து கட்டமைப்புகள் இருப்பதும் மற்றும் தடுப்பூசிகளை ஆராய்ச்சி முறையில் தயா ரித்து மேம்படுத்துவதற்காகச் சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தனியாருக்குத் தொழிற்சாலை யைத் தாரைவார்ப்பதற்காக, “காலதாமதம்” என்ற தவறான தகவல்களை மத்திய அரசு அளித்து வருவதுடன் பணியாளர்களைக் கட்டா யமாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள னர் என பணியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ( பிப்ரவரி 27 ஆம் தேதி) இந்நிறுவனத்தை நேரில் சென்று ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பின ரும் சிஐடியு அகில இந்திய தலைவர்களில் ஒருவருமான டி.கே.ரங்கராஜன் கூறுகையில், “பல கோடி ரூபாய் செலவில் 2007 ஆம் ஆண்டில் பிரம்மாண்டமான இந்துஸ்தான் பயோ கெமிக்கல் நிறுவனம், 2020 ஆம் ஆண்டிலும் தொடங்கிய நிலையிலேயே உள்ளது. உலகம் முழுவதும் சேவை செய்ய துவக்கப் பட்ட இந்த நிறுவனம் துவக்கப்பட்ட நாளிலி ருந்து உற்பத்தியை தொடங்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.இந்நிறுவனம் பொதுத்துறை யாக தொடர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தில்லி செல்லும்போது துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி இந்நிறு வனம் தொடர்ந்து செயல்பட ஆவன செய்வேன். நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் பயன்தரத் தக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பூசி மருந்து தொழிற்சாலையை பாதுகாக்க தமி ழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். டி.கே.ரங்கராஜன் எம்.பி.யின் வேண்டு கோளை மக்கள் நல்வாழ்வு கழகம் வரவேற்கி றது. ஏற்கெனவே கடந்த 2008 ஆம் ஆண்டு அன்பு மணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச் சராக இருந்தபோது, தமிழகத்தில் குன்னூர் பாஸ்டனில் இயங்கிய 110 ஆண்டுகளை தாண்டிய மத்திய அரசின் முத்தடுப்பூசி( ஜன்னி, தொண்டை அடைப்பான்,கக்குவான் இருமல் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு போடப்படும் ஊசி) தொழிற்சாலை மற்றும் குழந்தை களுக்கு மூளை டி.பி., ரத்த டி.பி., மற்றும் நுரை யீரல் டி.பி.,வராமல் தடுக்க மருந்து தயாரித்த கிண்டி மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ( BCGVL) மற்றும் இமாச்சலப்பிரதேசம் கசோலியில் இயங்கிய வெறிநாய் தடுப்பூசி மருந்து தயா ரிக்கும் மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ( CRI) ஆகிய 3 தடுப்பூசி நிறுவனங்களையும் மூடி விட்டு தனியார் தடுப்பூசி ஆலைகளை கொண்டு வர முயற்சி செய்தார். இதனை கடுமையாக கண்டித்து மீண்டும் இந்த 3 பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங் களை பாதுகாக்க தமிழக மக்கள் நல்வாழ்வு இயக்கம் பல்வேறு போராட்டங்களை, விழிப்பு ணர்வு கூட்டங்களை தொடர்ந்து நடத்தியது டன், மத்திய அரசுக்கு தடுப்பூசி நிறுவனங்கள் திறக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பல லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் காந்தி ஜெயந்தி தினத்தன்று சென்னை மெரினாவில் நடத்தப்பட்டது. குழந்தைகள் உயிரை காப்பாற்ற அரசு தடுப்பூசி தொழிற்சாலைகளை திறக்க குரல் கொடுக்க “ குழந்தைகள் தினத்தன்று” மனிதச் சங்கிலி போராட்டத்தை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே நடத்தினோம். இந்த போராட்டத்தை ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னருமான பிருந்தா காரத், நல்வாழ்வு இயக்க நிறுவனர் பேராசிரியர் சந்திரா உள்ளிட்ட சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள், இயக்க உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற னர். இந்த போராட்டத்தில் எழும்பூர் அரசு குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் மக்கள் நல்வாழ்வு கழக நிர்வாகியுமான டாக்டர் எஸ்.காசி, சமீபத்தில் மறைந்த அரசு அனைத்து மருத்துவர்களின் கூட்டமைப்பு தலைவர் எல்.லெட்சுமி நர சிம்மன் உள்ளிட்ட சங்க மாநில-மாவட்ட நிர்வாகி கள் வழிகாட்டுதலில் மாணவர் சங்கம், வாலி பர் சங்கம், மாதர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த வர்கள் கலந்துகொண்டனர்.இதர அரசு ஊழி யர்கள் சங்கம்,பத்திரிகையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பின ரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். சென்னை எல்எல்ஏ கட்டிடத்தில், “மூடப் பட்ட மத்திய அரசின் 3 தடுப்பூசி தொழிற்சாலை களை மீண்டும் திறக்க வலியுறுத்தி நடந்த கருத்த ரங்கில்” டி.கே.ரங்கராஜன் எம்.பி., மலைச் சாமி எம்.பி., பேராசிரியர் மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர் டாக்டர் ஜேக்கப் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்காவிட்டால் சமூகத்திற்கு என்ன கேடு விளையும் என்பதை எடுத்துரைத்தார்கள். இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த 2008 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோரை சந்தித்து, அன்புமணியால் மூடப்பட்ட 3 தடுப் பூசி நிறுவனங்களையும் திறக்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் எம்.பி., வலியுறுத்தியதன் விளைவாக மீண்டும் இந்நிறுவனங்களை திறக்க பிரதமரும் சுகாதார அமைச்சரும் உத்த ரவிட்டு, தற்போது தனது உற்பத்தியை தொடங்கி தேசத்திற்கு சேவையாற்றி வரு கிறது. இது மக்கள் நல்வாழ்வு கழகத்திற்கும் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். எனவே திருக்கழுகுன்றம் திருமணியில் செயல்பட்டு வரும் எச்பிஎல் நிறுவனத்தை மூடா மல் தடுக்க மீண்டும் பொதுமக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மக்கள் நல்வாழ்வு கழ கம் முன்னெடுக்கும். அனைத்துத்தரப்பு மக்க ளின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலமே இந்த நிறுவனத்தை மூடாமல் தடுக்க முடி யும். இதுகுறித்து விவாதிக்க மக்கள் நல்வாழ்வு கழகத்தின் மாநில அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 7 ஆம் தேதி சனிக்கிழமையன்று நடை பெற உள்ளது. இதில் இப்பிரச்சனை குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோ சிக்க உள்ளோம். அனைத்துத்தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர் ரெக்ஸ் சற்குணம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.