tamilnadu

img

சென்னை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது!

சென்னை, மே 6 - பிளஸ் 2 தேர்வில் சென்னை பள்ளி களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள் ளது. இந்த ஆண்டு 87.13 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள் ளனர். இது கடந்த ஆண்டை விட 0.27 விழுக்காடு அதிகமாகும்.

பெருநகர சென்னை மாநகராட் சியின் கீழ் 35 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் 2858 மாணவிகள், 2140 மாணவர்கள் என 4998 பேர் 12ஆம் வகுப்பு பயின்றனர். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி  வரை நடைபெற்றது. இந்த தேர்வுக் கான முடிவுகள் திங்களன்று (மே 6) வெளியிடப்பட்டது.பொதுத்தேர்வு எழுதிய 4998 மாண வர்கள் 4355 பேர் (87.13 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.27 விழுக்காடு அதிக மாகும். மாணவிகள் 2605 பேரும் (91.15 விழுக்காடு), மாணவர்கள் 1750 பேரும்  (81.78 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள் ளனர். மாணவர்களை விட மாணவியர்  தேர்ச்சி விகிதம் 9.37 விகிதம் அதிக மாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் கடந்தாண்டை ஒப்பி டும் போது மாணவிகள் தேர்ச்சி விகிதம் 0.35 விழுக்காடு குறைந்தும், மாணவர்க ளின் தேர்ச்சி விகிதம் 0.71 விழுக்காடு உயர்ந்துள்ளது.

100 விழுக்காடு தேர்ச்சி
நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலி டத்தை பிடித்துள்ளது. அப்பாசாமி தெரு  சென்னை மேல்நிலைப் பள்ளி 98 விழுக்காடும், திருவான்மியூர் சென்னை  மேல்நிலைப்பள்ளி 96.43 விழுக்கா டும், அமைந்தகரை புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 95.05 விழுக்காடும், கொளத்தூர் சென்னை மேல்நிலைப் பள்ளி 95.16 விழுக்காடும் தேர்ச்சி பெற்று அடுத்த டுத்த இடங்களை பிடித்துள்ளன.

முழு மதிப்பெண்
விலங்கியல், கணிதம், புவியியல் பாடப் பிரிவுகளில் தலா ஒருவரும், கணக்கியல் பாடப்பிரிவில் 2 பேரும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 9  பேரும், பொருளாதாரம்  பாடப் பிரிவில்  12 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாட ப்பிரிவில் 16 பேரும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 16 பேரும் என 56 பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள் ளனர். மாணவர்களின் இந்த சாதனை பயணம் தொடரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரிகள் வாழ்த்து தெரி வத்துள்ளனர்.

பின் தங்கியது ஏன்?
2022ல் 86.47 விழுக்காடு, 2023ல் 86.86 விழுக்காடு, 2024ல் 87.13 என சென்னை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. அதே சமயம், கடந்தாண்டு 71 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்த நிலை யில், இந்த ஆண்டு 56 ஆக குறைந்துள்ளது.கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளி, சுப்பராயன் சென்னை மேல்நிலைப் பள்ளி நெசப்பாக் கம் சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் கணிசமாக தேர்ச்சி விகிதம் குறைந்து ள்ளது. இந்த ஆண்டு முதல் 5 இடங்களுக்குள் அந்தப் பள்ளிகள் இடம் பெற வில்லை.

மாணவர்கள் சாதனை!

சென்னைப் பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் படிக்கின்றனர். அவர்களிலும் தனித்திறன் மிக்க கற்றல்திறன் உள்ள குழந்தைகள்பலர் உள்ளனர் என்பதை இந்த தேர்ச்சி விகிதம் காட்டுகிறது.

பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பெண்கள் பள்ளி மாணவர் பூங்கோதை600க்கு 578 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். கொளத்தூர் மாநகராட்சி பள்ளி மாணவன் ஷாரூக், கொருக்குப்பேட்டை புத்தா  தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்தலா 575 மதிப்பெண்கள் எடுத்து 2ஆவது இடத்தையும், பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பள்ளி மாணவிகள் ஹரினி பிரியா, திவ்யா ஸ்ரீ ஆகியோர் தலா  573 மதிப் பெண்கள் பெற்று 3ஆவது இடத்தை யும் மற்றொருவர் 572 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித் துள்ளனர்.

 தரமணி மேல்நிலைப் பள்ளி,  பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அமைந்தகரை புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 3 பேர் தலா 571 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளனர்.