tamilnadu

img

முதுபெரும் தோழர் சிவப்பு சட்டை பலராமன் காலமானார்

திருவள்ளூர், ஜூலை 17-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சிவப்பு சட்டை பலராமன் வியாழனன்று (ஜூலை 16) காலமானார். அவருக்கு வயது 85. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தில் இருந்து, 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.  சீமாவரம் ஜமீனை எதிர்த்து, வீட்டு மனைப் பட்டா கேட்டு மறைந்த தோழர் சி.கே.மாணிக்கம் தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தி னார். அப்போது சி.கே.மாணிக்கம் கைது செய்யப் பட்டார். இதற்கெதிராக சுப்பாரெட்டி பாளையம் பகுதி மக்கள் நடத்திய போராட்டங்களில் முன் னின்றவர் தோழர் பல ராமன். இதன்தொடர்ச்சியாக கொசஸ்தலை ஆற்றின் முன்பகுதியிலேயே சுப்பா ரெட்டிபாளையம் என்கிற பகுதி உருவாவதற்கும், அப்பகுதியில் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைப்ப தற்கும் கம்யூனிஸ்ட் இயக்  கத்தின் போராட்டம் வழி வகுத்தது.  அத்தகைய வீரமிக்க போராட்டம் தொடங்கி, இறக்கும் வரையில் தோழர் பலராமன் பல்வேறு இயக் கங்களுக்கு தலைமை தாங்கினார். தோழர் பலராம னின் அடையாளமே சிவப்பு  சட்டைக்காரர் என்பதுதான். எப்போதும் சிவப்பு சட்டையு டனே இருப்பார். அவரை அனைவரும் சிவப்பு சட்டை  பலராமன் தோழர் என்றே  அழைப்பார்கள். மக்கள் நலனுக்காக நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றார். அவரின் உடலுக்கு கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், ஒன்றியச் செய லாளர் என்.ரமேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.விநாயகமூர்த்தி, அ.து.கோதண்டன், இ.தவமணி, பி.கதிர்வேல் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் வெள்ளி யன்று (ஜூலை 17) சுப்பா ரெட்டி பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.