tamilnadu

img

மெரினாவில் கடலில் குதித்த தாய் பலி, மகன் மீட்பு

சென்னை, ஏப். 26- சென்னை மெரினாவில் குடும்பத் தகராறு காரணமாக கடலில் தாய், மகன் இருவரும் குதித்தனர். இதில் மகன் உயிருடன் மீட்கப் பட்டார்.சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரேவதி (54). இவர்களது மகன் சண் முகப்பிரியன் (25). இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ரேவதியும், அவரது மகன் சண்முகப்பிரியனும் பேருந்தில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்று, அங்குள்ள கல்லுக்குட்டை பகுதியில் கடலில் குதித்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் சென்று கடலில் குதித்த அவர்களை காப்பாற்ற முயன்றனர்.சண்முகப்பிரியனை காப்பாற்றி காவல் துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் ரேவதியை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானர். காவல் துறையினர் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;