tamilnadu

img

‘மதப்பிரச்சாரம் செய்வது அல்ல; கோவில்களை நிர்வகிப்பதே அறநிலையத்துறை பணி!’ கி.வீரமணி அறிக்கை

சென்னை, ஆக. 27 - முத்தமிழ் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து, திராவிடர் கழ கத் தலைவர் கி.வீரமணி  அறிக்கை வெளியிட்டுள் ளார்.

அதில் “இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் கோவில் சொத்துக்களை பாது காப்பது, வரவு – செலவுகளை சரி பார்ப்பது தானே தவிர, பக்தியைப் பரப்புவதற் கானது அல்ல. 

அறநிலையத் துறை அமைச்சரின் பணி என்பது, ஆறு மரக்கால் அரிசி என்றால், அதை அளவுப்படி சரியாகப் போடுகிறார் களா என்று பார்ப்பதுதானே தவிர, சாமி கும்பிடுவதோ, ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதோ அல்ல’’ என்று நாவலர் நெடுஞ் செழியன் பளிச்சென்று சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியது நமது முக்கிய கடமையாகும். பாராட்ட வேண்டிய நேரத்தில் மனந்திறந்து பாரா ட்டுவது போலவே, சறுக்கல் வரும் நேர த்தில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தும் முக்கிய கடமையாகும். அந்த அடிப் படையில், அனைத்துலக முருகன் மாநா ட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதில் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவை யாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.