பொதுத்துறையாகவே மின்வாரியம் நீடிக்கும்: அமைச்சர் உறுதி
சென்னை, பிப்.21- “தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனியார் மய மாக்கப்படமாட்டாது. தற்போதுள்ள சூழ்நிலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு மட்டுமே மூன்றாக பிரிக்கப்படுகிறது. இதன் மூலம் மின் சார வாரியம் தனியாருக்கு தாரைவார்க் கப்படும் என்று கூறப்படுவது முற்றிலும் தவறானது. ஒருபோதும் மின்வாரியம் தனியார்மயமாக்க மாட்டோம். பொதுத் துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும்” என்று புதனன்று நடை பெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மார்ச் 3- போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை, பிப்.21- போலியோ எனப்படும் இளம் பிள்ளை வாத நோயைத் தடுக்க, பிறந் தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஆண்டு தோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
இதன் பயனாக, போலியோ ஒழிக் கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததால், கடந்த 4 ஆண்டு களாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு பொது சுகா தாரத்துறை மூலம் தமிழகம் முழுவதும் மார்ச் 3 அன்று காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை 43 ஆயி ரத்து 51 இடங்களில் 57 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களி லும் சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.