tamilnadu

img

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திருநின்றவூரில் வாக்கு சேகரிப்பு

திருநின்றவூர், ஏப்.11- திருவள்ளூர் (தனி), மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வியா ழனன்று (ஏப் 11) ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் பகுதியில்,கை சின்னத்திற்கு  வாக்குகளை சேகரித்தார். கெங்குரெட்டி குப்பத் தில் துவங்கி நெமிலிச்சேரி,  நடுகுத்தகை, பெரியார் நகர், திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருநின்றவூரில் உள்ள எ,பி, சி, டி ஆகிய  நான்கு கிளைகள், தர்மராஜா  கோயில் தெரு கிளை, நெமிலிச்சேரி கிளை, மேட் டுத்தெரு, லட்சுமிபதி நகர்  ஆகிய கிளைகளின் சார்பில்  வேட்பாளர் சசிகாந்த் சொந்திலுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

திமுக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலா ளர் சா.மு.நாசர், எம்எல்ஏ,  தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப் பினரும் ஆவடி தொகுதி பொறுப்பாளருமான எம்.பூபாலன், காமராஜர் நகர்  கிளைச் செயலாளர் டி.குண சேகரன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபட் எபிநேசர், ஒன்றிய குழு  உறுப்பினர்கள் அறிவழகன்,  ஜெயராமன், கணேசன், பவுர்ணமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலை வர் எம்.ராமசாமி, செயலாளர் பி.மாதவன்,  சிஐடியு நிர்வாகிகள் செல்வி,  சரிதா, சங்கீதா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.   வேட்பாளர் வாக்கு சேகரிக்க  சென்ற இடங்களில்  கூட்டணி  கட்சியினர் சார்பில் மலர் களை தூவி  சிறப்பான வரவேற்பு அளித்தனர்.