tamilnadu

img

‘ஜெய்பீம்’ நிஜ நாயகன் ராஜாகண்ணு குடும்பத்திற்கு இறுதி இழப்பீடு

சென்னை, ஏப்.20- அதிமுக ஆட்சியின் காவல் துறையால் படுகொலை செய்யப்  பட்ட ராஜாகண்ணு குடும்பத்திற்கு,  இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா கண்ணு. பட்டியல் பழங்குடி வகுப்  பைச் சேர்ந்த இவரை, காவல்துறை  திருட்டு வழக்கு ஒன்றில் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்  தது. காவல்துறையினர் விசாரணை  என்ற பெயரில் அவரைச் சித்திர வதை செய்து படுகொலை செய்த னர். அதனை வெளியே தெரியாமல்  மூடி மறைக்கவும் செய்தனர். ஆனால்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி, இந்த படுகொலையை வெளியுலகிற்கு கொண்டு வந்தது.

மேலும், ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. பின்னாளில்  உயர் நீதிமன்ற நீதிபதியான சந்துரு,  முன்பு வழக்கறிஞர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் இந்த வழக்  கில் பார்வதி சார்பில் ஆஜராகி போலீசாருக்கு எதிராக வாதாடி னார். இந்த வழக்கில் காவல்துறை யினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட ராஜா கண்ணுவின் மனைவி மற்றும் உற வினர்களுக்கு இடைக்கால இழப் பீடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இடைக் கால இழப்பீடாக ராஜாக்கண்ணு மனைவிக்கு 1.35 லட்சம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச் சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சி யின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம்  ரூபாயும், மற்றொரு மகன் கொள ஞ்சியப்பன் உட்பட ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, காவல் துறையினர் அத்துமீறலால் பாதிக் கப்பட்ட ராஜாகண்ணுவின் உற வினர்களான தங்களுக்கு சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜாகண்ணுவின் சகோதரி மகன் கொளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மக னுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சிறப்புத் சட்டத்தின் கீழ்  வீட்டுமனை மற்றும் நிவாரணங் களை வழங்க உத்தரவிட வேண்டும்  என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதி பதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்  பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுமனை,  அரசு வேலை வழங்குவது குறித்து  நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி யும் தமிழக அரசு தரப்புக்கு உத்த ரவிட்டார். மேலும், விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கும் அவர் ஒத்திவைத்தார்.

ராஜாகண்ணு படுகொலைக்கு நீதி கேட்டு பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு, நடிகர் சூர்யா நடிப்பில்  சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜெய்  பீம்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.