திருவண்ணாமலை, ஜூலை 8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் வேலை செய்து வந்த ஒப்பந்த துப் புரவு தொழிலாளர் சுமார் 100 பேர் திடீர் பணி நீக்கத்தால் வேலையின்றி தவிக்கின்றனர். செங்கம் நகர் மற்றும் அதன் பேரூ ராட்சியை சேர்ந்த 18 வார்டுகளிலும் உள்ள துப்புரவு பணியினை பேரூராட்சி நிர்வாகத் தால் ஒப்பந்த அடிப்படையில் செங்கம் துக்காப்பேட்டை, தோக்கவாடி, காயம்பட்டு பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15 வருடங்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் திருச்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு துப்பு ரவு பணிக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த நிறுவனம் ஏற்கனவே பணியில் இருந்த தொழிலாளர்களை எந்த முன் அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்பு ரவு பணியாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 4ஆவது நாளாக சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் கணபதி தலைமையில் செங்கம் வட்டாட்சி யர் அலுவலகம் முன் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் பாரி, நிர்வாகிகள் காங் கேயன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வாய்மொழி உத்தரவு மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனை வருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும், செங்கம் பேரூராட்சியில் துப்புரவு பணி யினை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவ டிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிகைகயை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் செங்கம் வட்டாட்சியர் பார்த்த சாரதியிடம் மனு அளிக்கப்பட்டது.