tamilnadu

img

கூட்டாட்சி பாதுகாப்பு இயக்கத்தோடு இணைந்ததே காஷ்மீரிகள் போராட்டம் தமிழக மக்கள் பேராதரவு தர தாரிகாமி வேண்டுகோள்

சென்னை, ஆக.31 - “நாட்டின் அரசமைப்பு சாசனத்தை  மதிக்காத ஆட்சி மத்தியில் இருப்ப தால், காஷ்மீருக்கு ஏற்பட்டுள்ள துயர நிலைமைகள் நாளை பிற மாநிலங் களுக்கு ஏற்படாது என்ற உத்தர வாதம் இல்லை. அதனைத் தடுத்து நிறுத்தும் பேரியக்கத்தில் தமிழக மக்களும் இணைய வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழு சார்பில் ஞாயிறன்று இணையதளக் கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் சிறப்புரையாற்றிய, காஷ்மீரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தாரிகாமி, “இந்தியா வின் ஜனநாயகத்தையும் அரசின் மதச்சார்பின்மையையும் கூட்டாட்சி அமைப்பையும் பாதுகாப்பதற்கான மகத்தான இயக்கத்தோடு இணைந்தது தான் காஷ்மீர் மக்கள் போராட்டம். நாடு முழுவதும் உள்ள சகோதர சகோதரி கள் எங்களோடு தோள்கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

லாக்டவுன் - பிரேக்டவுன்
நாடு முழுவதும் கொரோனாக் கிருமியின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்களுக்கு உண்மையாகத் தேவைப் படும் நிவாரணங்கள் கிடைக்க வில்லை. தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் உலகளாவிய முயற்சிகள் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். கொரோனாவால் நாட்டின் மற்ற மாநி லங்களில் ஊர் முடக்கம் (லாக்டவுன்) கொண்டுவரப்பட்டது. காஷ்மீரிலோ கொரோனாவுக்கு முன்பிருந்தே, ஓராண்டுக்கு மேலாக, செயல் முடக்கம் (பிரேக்டவுன்) செயல்படுத்தப்படு கிறது. ஊரடங்குக் காலத்தில் தென்கோடிக் குமரியும், வடகோடிக் காஷ்மீரும் அனுபவிக்கும் நிலைமை கள் ஒன்றல்ல. குமரி மக்களுக்கு காஷ்மீர் மக்களின் நிலைமை வர வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். தனித்துவம் மிக்க  காஷ்மீர் இன்று எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறது என்பதை நாடு முழு வதுமே புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், காஷ்மீர் பற்றி யும், அதன் தனித்துவமான வரலாற் றோடு இணைந்த 370வது சட்ட உரை  பற்றியும் பொய்யான தகவல்கள்தான் கடந்த காலத்தில் பரப்பப்பட்டு, பல நூறாண்டு வரலாறு சிறுமைப்படுத்தப் பட்டு வந்து தாரிகாமி குறிப்பிட்டார்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீருக்குப் பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடியபோது இந்தியாவோடு இணைவதற்கு முன்வந்த காஷ்மீர் மக்களோடு செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் வரலாற்றை நினைவுகூர்ந்தார். 370வது சட்டப்பிரிவு, இந்திய-காஷ்மீர் மக்களிடையேயான உறவை வலுப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்றார் அவர்.

‘370’ நீக்கம்
சென்ற ஆண்டு மிகப்பெரும் தாக்குதலாக 370வது சட்ட பிரிவு விலக்கப்பட்டது. மாநில நிலை இறக்கப் பட்டு ஒரு யூனியன் பிரதேசமாக்கப் பட்டது. கடுமையான கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டன. தலைவர்கள் வீட்டுக் காவலில்வைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் இன்றும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் ஒருவரையொருவர் சந்திக்க முடிய வில்லை. சுற்றுலாத் துறை சீர்குலைந்து விட்டது. காஷ்மீரின் அடையாளமாக இருந்த கைவினைத் தொழில்கள் பெரும் நசிவைச் சந்தித்துள்ளன. இந்த நடவடிக்கைகளால் ஒருமைப்பாடு வலுப்பெறும், வளர்ச்சி மேலோங்கும், பயங்கரவாத சக்திகள் அழிந்துபோகும், புதுயுகம் பிறக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. எதுவுமே நடக்கவில்லை. ஆர்எஸ்எஸ் சொல்வதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்நிலையில் நாம் நமது எதிர்காலத்தை இழந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

‘புதிய கல்விக் கொள்கையும் கல்வி உரிமையும்’ குறித்து உரையாற்றிய அருட்பணி பால் மைக்கேல், “இந்தியா பல தேசங் களின் கூட்டமைப்பாக உருவான நாடு. இப்படிப்பட்ட பல நாடுகளில் ஒரே மாதிரியான கல்விக்கொள்கை இல்லாத போது, பல தேசங்களையும் பல பண்பாடுகளையும் கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான கல்விக்கொள்கை ஆழமான சீர்குலைவுகளையே ஏற்படுத்தும்,” என்று எச்சரித்தார். பொது அதிகாரப் பட்டியலில் உள்ள கல்வி தொடர்பான கொள்கை யை, மாநிலங்களைக் கலந்தாலோ சிக்காமல் மத்திய அரசு செயல்படுத்த இருப்பது, மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகவும் வந்துள் ளது. ஆர்எஸ்எஸ் தலைமை புதிய கல்விக் கொள்கையில் தங்களது 60 சதவீதப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டி ருக்கின்றன என்று கூறுகிறது. அது  என்ன பரிந்துரைகள் என்பது ஒரு புறமிருக்க, இது போல் பிற அமைப்பு களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏன் கேட்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கொடிய காலத்திலும்
கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கிய சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முக மது, “கொடிய கொரோனா தாக்குதல் காலத்திலும் கூட மத்திய ஆட்சி யாளர்கள் மக்கள் பிரச்சனை களுக்குத் தீர்வு காண்பதற்கு மாறாக, தங்களது அரசியல் நோக்க நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்,” என்றார். மதச்சார்பின்மைக்காகக் குரல் கொடுப்போர் மீது வழக்குகள் புனையப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார். கருத்தரங்க நோக்கவுரை யாற்றிய பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 5 அன்று தமிழகத்தில் 500 மையங்களில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்தார்.

சூழ்ச்சிகரமான சூழல்
அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் பற்றிப் பேசிய மூத்த வழக்குரைஞர் வைகை “காஷ்மீரில் நடந்திருப்பது தனி நிகழ்வு அல்ல.  நாடு முழுக்கத் திட்டமிட்டு உரு வாக்கப்படும் சூழ்ச்சிகரமான சூழ லின் ஒரு பகுதிதான் இது,”என்றார். அரசின் மதச்சார்பின்மை, ஜன நாயகம், மக்களின் அடிப்படை உரிமைகள் இந்த மூன்றும் அர சமைப்புச் சட்டத்தின் அடிப்படை கள். அதற்கு எதிரான தொடர்ச்சி யான தாக்குதல்களில், கலாச்சார அடையாளங்கள் பறிக்கப்படு கின்றன. கலாச்சார அடையாளத்தை பறித்துவிட்டு மதத்தைப் பின்பற்ற உரிமை என்பதில் என்ன பொரு ளிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். மத அடிப்படையிலான குடியுரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அஸ்திவாரத்தையே தகர்க்கிற சதி என்றும் அவர் குறிப்பிட்டார். ‘சிறுபான்மையினரும் அரசமை ப்புச் சட்டமும்’ என்ற தலைப்பில் உரை யாற்றிய மூத்த வழக்குரைஞர் ‘சிக ரம்’ ச.செந்தில்நாதன், “அடிப் படை உரிமைகளாகச் சொல்லா மல், வழிகாட்டு நெறிகளில் சொல்லப் பட்டுள்ள சில அம்சங்களைப் பயன் படுத்தி, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை எடுக்க வழி இருக்கிறது,” என்று கூறினார்.

 அதற்கு எடுத்துக்காட்டாக, பசு வதை தடுப்பு என்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளதன் அடிப்படையில் பல மாநிலங்களில் சட்டம் இருப்பது பற்றி யும், அதைத் தவறான முறையில் பயன்படுத்திக் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுவது பற்றியும் விளக்கினார். அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய மோச மான அம்சங்களைக் கூட, நல்ல ஆட்சி யாளர்களால் சரியான முறையில் கை யாளவும் மக்களுக்கு நன்மை செய்ய வும் முடியும். மோசமான ஆட்சி யாளர்கள் நல்ல அம்சங்களைக் கூட மக்களின் உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். ஆகவே அரசமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடைய விரிவாக ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர். - தொகுப்பு: அ. குமரேசன்