கள்ளக்குறிச்சி சம்பவம்: கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை, ஜூன் 20- கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் மற்றும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி கவன ஈர்ப்புத் தீர்மானக் கடிதம் கொடுத்துள்ளார்.
இதேபோல், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பேரவைத் தலைவரை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குக் கடிதம் கொடுத்தனர்.
இந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அனைத்தும், வெள்ளிக்கிழமையன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி துயரம் : சட்டபேரவை இரங்கல்
சென்னை, ஜூன் 20 - தமிழ்நாடு சட்டப்பேரவையில், கள்ளக் குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்த 43 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதுகுறித்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்த இரங்கல் தீர்மானத்தில், “கள்ளக்குறிச்சியில் ரசாயனம் கலந்த கள்ளச் சாராயம் குடித்ததன் காரணமாக 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் அதிர்ச்சியை ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கும்
சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் வகையில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றதுடன், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரி விப்பதோடு, இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.