tamilnadu

“கந்து வட்டி ஒழியவில்லை குறைந்திருக்கிறது”

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஒப்புதல்

மதுரை, ஜன.22- மதுரையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் இருந்து கே.கே நகர் வரை ஐந்து கிலோ மீட்டர் தொலை விற்கு விழிப்புணர்வு பேரணி செவ்வாயன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இளைஞர்கள் நாட்டின் செல்வங்கள். அவர்கள் சாலை விபத்தில் இறப்பதை தடுக்க வேண்டும்.  விவசாயிகள், சாலை யோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதால்அவர்கள் கந்துவட்டிக்கு வாங்குவது குறைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக பொறுப் பேற்ற பிறகு கந்துவட்டி முழுமை யாக ஒழிந்துவிட்டது எனக் கூறுவதை விட குறைத் திருக்கிறோம்.கூட்டுறவு சங்கத்தில் விவசாயி ஒருவர் பிணையின்றி ரேசன் கார்டை காட்டிரூ.50 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனை சிறுக சிறுக கட்டிவிட்டு மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
 

;