தமிழகம், புதுவையில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மதவெறி சக்திகளின் பண பலம், அதிகார பலம் தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி ‘இந்தியா’ அணி வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. நரேந்திர மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்பதை தமிழக வாக்காளப் பெருமக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.