tamilnadu

img

பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் அரசு செயல்படக் கூடாது: விவசாயிகளுக்கு ஆதரவாக வெற்றிமாறன்

சென்னை, பிப்.05-
பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் அரசு செயல்படக் கூடாது என்று விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாக கடும் குளிரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் விவசாயிகள் போராட்டம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், "போராட்டம் என்பது செவிசாய்க்கப்படாத கோரிக்கைகளை உடைய மக்களின் வெளிப்பாடு. அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கியவர்கள் மக்கள். அது, மக்களின் நலனைக் காக்க வேண்டும். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது. நாட்டின் ஆன்மாவைக் காக்க விவசாயிகள் முயல்கிறார்கள். தங்களின் உரிமைகளுக்காக போராடுவதும் அப்போராட்டத்துக்கு ஆதரவளிப்பதும் ஜனநாயகமாகும்". என்று தெரிவித்துள்ளார்.

;