tamilnadu

img

குடிமனைபட்டா கோரி பீடித்தொழிலாளர்கள் போராட்டம்: அரசு நிர்வாகம் வாக்குறுதி

 திருவள்ளூர், ஏப் 19-   செங்கை மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு), சார்பில் புதனன்று  (ஏப் 19) ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, கால்வாய் கரை, மெய்யூர், திருவள்ளூர்,  எடப்பாளை யம், ஏரையூர், ஈக்காடு,  விளாப்பாக்கம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் பீடிசுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள மிகவும் பிற்படுத்தப் பட்டோர், இஸ்லாமியர்கள், ஆதிதிரா விடர், பழங்குடி இன மக்கள் என சமூ கத்தில் விளிம்பு நிலையில் உள்ள வர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கக் கோரி இந்தப்போராட்டம் நடை பெற்றது.  இந்த நிலையில் மெய்யூர் ஊராட்சி யில் உள்ள குருபுரத்தில் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. இதில்  402 குடும்பங்களுக்கு 3  சென்ட் வீதம் குடிமனை பட்டா வழங்க வேண்டும்  என கிராமசபை கூட்டத்தி லும் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. 402 குடும்பங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் வட்டாச்சியர்,  ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோரிடம் 2015ம் ஆண்டே சங்கத்தின் சார்பில் வழங்கி யுள்ளனர்.

அரசு நிலத்தை அடை யாளம் கண்டு  அதிகாரிகளுக்கு தெரி வித்தும் கடந்த 9 ஆண்டுகளாக பட்டா வழங்குவதற்கான எந்த நடவடிக்கை யும் இல்லை.  இந்த சூழலில் காத்தி ருக்கும்போராட்டம் நடைபெற்றது. இதையறிந்து போராட்டம் நடை பெறும்  இடத்திற்கு வந்த வட்டாட்சியர்  வசந்தி ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வாழும் சுமார் 200  குடும்பங்களுக்கு மட்டும் குடிமனை பட்டா மே 1 அன்று  வழங்கப்படும்.  மற்ற பயனாளிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு உள்பட்ட வட்டாட்சி யர்களுக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். இதனிடையே தொழிலாளர்கள் குறித்த ஆவணங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலு வலரிடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டது.  இந்த போராட்டத்திற்கு செங்கை  மாவட்ட பீடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஆர்.பல ராமன் தலைமை தாங்கினார்.இதில் தமிழ்நாடு பீடி தொழிலாளர் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், கவுரவ தலைவர் ப.சுந்தரராசன், சம்மேளன மாநிலப் பொருளாளர் எஸ்.பாப்பூ, மாவட்டச் செயலாளர் கே.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் டி.டில்லி, சிஐடியு நிர்வாகி ஆர்.முரளி, விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.