tamilnadu

img

அரசு பள்ளிகளில் ஆகஸ்ட்  3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவக்கம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதம்  கோடை விடுமுறை  முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை. இந்நிலையில் அரசு பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 3ம்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
அதேபோல் 11ம் வகுப்புக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.