கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள்: அமைச்சர் ஆய்வு
தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக் குறிச்சி வட்டத்தில் உள்ள வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களைக் கொண்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுத்துறை அரசு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது, கட்டுமான பணி களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு வழங்கி னார். மேலும் கட்டுமானப் பணிகள் தரத்தை தொடர்ந்து உறுதி செய்ய தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன்,மணிக்கண்ணன், நாடாளு மன்ற உறுப்பினர் மலையரசன், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் மணி வண்ணன், கண்காணிப்புப் பொறியாளர் பரிதி,மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப் பணித்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஒன்றிய பாஜக அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன்,மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், தேவி,ஒன்றியச் செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார், கே.ஆனந்தராஜ், வேலா.பாலகிருஷ்ணன்,நகரச் செயலாளர் பி.ஸ்டாலின்,மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சின்னராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.