tamilnadu

மக்களவை தேர்தல்

சென்னை,ஜன.29- மக்களவைத் தேர்தல் பணிகளை  ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை யிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு,  எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதய நிதி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 24 ஆம் தேதி துவங்கியது. இதில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கோவை, சேலம், நீலகிரி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, தருமபுரி மக்க ளவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. இதில் வேட்பாளர் தேர்வு, வெற்றி வாய்ப்பு போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக  நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக  கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

அதற்காக அனைவரும் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.