tamilnadu

img

ஏழை மக்களின் வீடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முயற்ச்சி

ஆயிரம் விளக்கு பகுதி, 113 வது வட்டம், தங்கவேல் தெருவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்களின் 77 வீடுகளை அப்புறப்படுத்த வியாழனன்று (ஆக.12) அந்தப்பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அதிகாரிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிகுழு உறுப்பினர் தி.சிவக்குமார், கிளை செயலாளர் டி.சங்கர், தி.சுரேந்திரன், டி.ராஜாமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். குடியிருப்புகளை அகற்ற 3 மாத அவகாசம் கோரினர். இதனையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த குடியிருப்பு பிரச்சனை தொடர்பாக வெள்ளியன்று (ஆக.13) மாநகராட்சி மண்டல அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.