“2024 மக்களவைத் தேர்தல், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதை தீர்மானிப்பதாகத்தான் பார்க்க வேண்டும். இந்தத் தேர்தல் எங்களைப் பொறுத்தவரை அதிமுக, பாஜகவுடன் போட்டியாக இல்லை. எங்களுக்குள் (திமுக தலைவர்களுக்குள்) யார் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெறுகிறோம் என்பது தான் போட்டியாக இருக்கிறது” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.