tamilnadu

img

வேலூரில் ஜமாபந்தி: பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் ஆட்சியர்

வேலூர், ஜூன் 20 – வேலூர் மாவட்டத்தில் 1433 ஆம் பசலி ஆண்டிற் கான (வருவாய் தீர்வாயம்) ஜமாபந்தி  6 வட்டங்களில் ஜூன்19 முதல்  26ந்தேதி வரை நடைபெறுகிறது. பேர்ணாம்பட்டு வட்டாட் சியர் அலுவலகத்தில் புதனன்று நடைபெற்ற  ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லெட்சுமி கலந்துகொண்டு வருவாய் ஆவண கணக்கு களை ஆய்வு செய்து பொது மக்களிடமிருந்து 133 கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிக ளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்த மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலத்துறை அலுவ லருக்கு உத்தரவிட்டார். இதே போன்று அணைக் கட்டு வட்டாட்சியர் அலுவல கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் முருகன்  தலைமையில் நடை பெற்றது.  அணைக்கட்டு சட்ட மன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, வட்டாட்சியர் வேண்டா கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். இதில் 83 மனுக்கள் பெறப் பட்டது.