சென்னை, டிச. 4- மிக்ஜம் புயலால் சென்னையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் 34 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.மேலும் இந்த கன மழையில் சென்னையை சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட 6 நீர்தேக்கங்களில் 98 சதவீதம் வரை நீர் நிரம்பி திறந்து விடப்பட்ட உபரிநீரால் சென்னை முழு வதும் வெள்ளக்காடாக மாறியது.மேலும் இந்த புயலில் 5 பேர் உயிரி ழந்து உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏரிகள் முழுகொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்தவுடன் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து அதிகப்படி யான உபரி நீர் திறந்துவிடப்பட்டது. திறந்துவிடப்பட்ட அதிகளவிலான மழைநீர் செல்வதற்கு ஏற்ற முறையான வடிகால்கள் இல்லாததால் வெள்ள நீர் சூழ்ந்து பல பகுதிகளை மூழ் கடித்துவிட்டது. நீர் திறப்பு தொடர்பாக மக்களுக்கு தொலைபேசி வாயிலாக முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கப் பட்டதாக நீர்வளத் துறை கூடுதல் செயலர் தெரிவித்தார்.
சென்னை அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரை யோரம் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. ஜமாலியா பகுதி யில் வாகனங்கள் நகர முடியாதவகை யில் இடுப்பளவிற்கு தண்ணீர் சூழ்ந்தது.
சென்னையில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
குரோம்பேட்டை, தாம்பரம் அரசு மருத்துவமனைகள் நீரில் மூழ்கி யதால் நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், மாதவரம், கொளத்தூர், மணலி, திருவொற்றியூர், பெரம்பூர் போன்ற பகுதிகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியது. செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி கழுத்தளவு தண்ணீ ரில் மூழ்கியது. பல பகுதிகளில் மக்களை மீட்புப்படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.
மேலும் பலத்த சூறாவளி காற்றால் பழவேற்காடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதி மீனவ கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் வெளியேற முடியாத சூழலில் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை நாரா யண புறம் ஏரி நிரம்பியதால் தற்போது கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடி யிருப்புகளுக்குள் முதல் தளம் வரை வெள்ள நீர் புகுந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை அடித்துச் சென்றது.
மேலும் மழை வெள்ளத்திலிருந்து தங்கள் வாகனங்களை காப்பாற்ற வேளச்சேரி புதிய மேம்பாலத்தில் இரண்டு புறமும் நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
வேளச்சேரியில் திடீரென பெட்ரோல் நிலைய மேற்கூரை இடிந்து 40 அடிக்கு பள்ளமேற்பட்டு 5 தொழி லாளர்கள் விபத்தில் சிக்கினர். உடனடி மீட்பு பணியில் 3 நபர்கள் காயங்களு டன் மீட்கப்பட்டனர்.
கனமழையில் ஏரி மற்றும் புதர்களில் இருந்து முதலைகளும் பாம்பு களும் வெளியேறி மக்கள் இருக்கும் பகுதிக்குள் வர துவங்கி யுள்ளன. புயல் உருவான ஞாயிறன்று இரவு பெருங்குளத்தூர் நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் மக்கர் வகை முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளி யாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் பாம்பு நீந்தி செல்லும் காட்சி வெளியானது.
விடுமுறை
புயல் காரணமாக சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் திங்கள் பிற்பகல் 2.30 மணி நில வரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 250 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 380 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 380 கிமீ தெற்கு - தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலு வடைந்து வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அரசு மற்றும் முன்னணி களப்பணி பணிபுரியும் காவல், தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவ மனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநி யோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இந்த நான்கு மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று (05.12.2023) ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரண மாக செவ்வாயன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அதி காரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக செவ்வாயன்று (டிச. 5) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது.மேலும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.