சென்னை,ஜூலை 7- ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்த ரெட்டைமலை சீனிவாசனின் 160 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஞாயி றன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்ட பத்தில், அமைச்சர்கள் ஜெய க்குமார், சரோஜா ஆகியோர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் விளக் கம் அளிக்கப்படும் என்றும், சட்ட மன்றம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் போது இதுபற்றி பேசு வது மரபல்ல என்று கூறியது டன், தன்னை ஏன் வறுத்தெடுக் கிறீர்கள் என்றும் சலித்துக் கொண்டார்.