சென்னை,பிப்.8- ‘கடலோர பகுதிகளில் சவால்களும் ஆபத்துக்க ளும்’ என்ற தலைப்பில் அகில இந்திய மக்கள் அறிவி யல் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் எண்ணூர் முகத்துவாரம் அருகில் அகில இந்திய கடற்கரை மண்டல மாநாடு சனிக் கிழமை(பிப்.8) நடைபெற் றது அகில இந்திய அளவில் இரண்டு நாட்கள் நடை பெறும் இம்மாநாட்டில் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 11 மாநிலங் களில் இருந்தும் தமிழ்நாட் டின் கடலோரப் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 100 பிரதி நிதிகள் பங்கேற்றனர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி.தேவசகாயம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஆய்வாளர் டி.ரகுநந்தன் துவக்க உரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் வி.சுகு மாறன் மாநாட்டின் நோக்கங் களை விளக்கி பேசினார். மாநிலச் செயலாளர் எம்.எஸ். ஸ்ரீபன் வரவேற்றார். மக்கள் அறிவியல் கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் பி.ராஜமாணிக்கம், நீரியல் வல்லுநர். டாக்டர் எஸ்.ஜனகராஜ், டாடா அடிப்படை அறிவியல் வல்லுநர் டாக்டர் எஸ்.கீர்த்தி (ஹைதராபாத்), எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு மைய ஆய்வாளர் டாக்டர் ஆர்.ராமசுப்பிரமணியன், டாக்டர் டி.ரகுநாதன், அசோக் ராவ், ஜி.மோக பத்ரா, சின்மையா பட்டி கடற்கரை யோர மக்கள் வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் முதல்நாள் அமர்வில் கருத்துரையாற்றினார் உலகமயமாக்கல் கொள் கையால் இந்திய மீனவர்கள் வாழ்நிலை மாற்றங்கள் குறித்தும்அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் மாநாட்டில் விவா திக்கப்பட்டது. கடல்வளம் மீன்பிடித்தொழில் உப்பளத் தொழில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் புதிய துறைமுக வைத்தால் ஏற்படும் விளைவுகள் நகர மயமாதல் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. கோவா முதல் குஜராத் வரை மேற்கு வங்கம் கிழக்கு கடற்கரை வரை மத்திய அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் மோச மான விளைவுகள் குறித்து மாநாட்டில் கூடுதலாக விவாதிக்கப்பட்டது. உலகம் வெப்பமய மாதலால் பனிப் பிரதே சங்களில் உள்ள பனிப்பாறை கள் உருகி கடல் நீர்மட்டம் உயர்வதும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். அமர்வின் இறுதி நிகழ்வாக நீதி அரசர் ஹரிபரந்தாமன் தலைமையிலான விவாத கூட்டம் நடைபெற்றது. இதில் எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் தொழில் செய்யும் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் குறித்து நீதிபதி நேரடியாக விவாதித்தார். லிட்டில் சேகரிக்கப்படும் தகவல் களை ஆவணங்களாக மாற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.