சென்னையில் தெருநாய்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடபழனி போரம் விஜயா வணிகவளாகத்தில் புளுகிராஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்தமான நாய், பூனைக்குட்டிகளை தத்தெடுத்தனர். தொடர்ந்து 5வது ஆண்டாக நடத்தப்படும் இந்த தத்தெடுப்பு நிகழ்வுக்கு சென்னை மாநகர மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது. செல்லப்பிராணிகளுக்கும் அன்போடு பராமரிக்கும் ஒரு உரிமையாளர்கள் கிடைத்தனர்.