tamilnadu

img

போலியோ இல்லாத நிலையை தக்கவைக்க உழைத்த ஊழியர்கள்

சென்னை,ஜன.19- போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி ஞாயிற்றுக்கிழமை (ஜன.18)  தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், சத்துணவு, அங்கன்வாடி மையங் கள், பஸ், ரெயில்-விமான நிலை யங்கள், பூங்காக்கள், வணிக நிறு வனங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்  நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள  அவரது வீட்டில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி பொம் மைகளையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலை மைச் செயலாளர் சண்முகம், சுகா தாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் 5 வய துக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுமார் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவமனைகள் தவிர முக்கிய இடங்களிலும் முகாம் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டது. 3 ஆயிரம் வாகனங்கள், 1000  நடமாடும் குழுக்கள் மூலமும்  சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பகுதியில்  உள்ள ஆரம்பச் சுகாதார நிலை யங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், ரயில் நிலையங்கள் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களில் 1,438 நிரந்தர மையங்  களிலும், மால்கள், அங்காடி கள், பொழுது போக்கு மையங் கள் என மொத்தம் 1,645 மையங்க ளிலும் சொட்டு மருந்து வழங் கப்பட்டு வருகிறது. சென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் முடிந்ததும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது சொட்டு  மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் ஓ குறியீடும், வழங்கப்படாத வீடு களில் ஞ குறியீடும் போடப்படும். 7 ஆயிரம் ஊழியர்கள் இதில் ஈடுபட உள்ளனர். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் தமிழ் நாடு தொடர்ந்து 16 ஆண்டுகளாகப் போலியோ இல்லாத நிலையை  அடைந்துள்ளது. இதனைத் தக்க வைக்கும் வகையில் சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள்,சுகாதாரத்துறை ஊழியர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் தீவிரமாகச் செயல்பட்டனர்.

;