அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் அலுவலகம் எதிரே அண்ணா மலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டியும், முனைவர் பட்ட ஊக்கத் தொகையையும் காலமுறை பதவி உயர்வு களை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக அயர் பணி யிட ஆசிரியர்களை ஆங்காங்கே உள்ள டுப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் உள்ள காலி பணி யிடங்களை அயர்பணி ஆசிரியர் மூலம் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் செல்வராஜ், பரணி, செல்லபாலு, அசோகன், காயத்ரி, முத்து வேலாயுதம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தொடர்ந்து 4 கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய உள்ளோம். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோரிக்கைகள் நிறை வேறும் வரை உண்ணாநிலை நூதன மான போராட்டத்தை முன்னெடுப்போம். இதனிடையே கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றார்.