tamilnadu

img

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும் - அரசாணை வெளியீடு 

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற சட்டம் இருந்த நிலையில் , கடந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழு அதில் மாற்றம் செய்திருந்தது . மேலும், ஒன்றிய கல்வி அமைச்சகமும் இதுகுறித்த அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தது . இந்நிலையில் , ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு இது பொருந்தும் என்றும் , இனிவரும் நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கு ஆயுள் முழுதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;