states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் நேற்று நள்ளிரவு முதல் 2.15 மணிக்கு நடந்த வன்முறையில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் நேற்று தேர்தல் முடிந்த நிலையில், நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2.15 மணி வரை விஷ்ணுபூர் மாவட்டம் நரன்சேனா கிராமத்தில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு. 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;