tamilnadu

img

ஆசிரியர்- மாணவர்  விகிதாச்சாரம் பற்றி  நாளை ஆய்வு

 சென்னை,பிப்.23- மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும்  நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரி யர்கள், மாணவர்கள் விகிதாச்சா ரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா? என்பதை மாவட்டம் வாரியாக ஆய்வுசெய்ய தொடக்கக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி அனைத்து முதன்மை கல்வி  அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில்,  அனை த்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், அவரவர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர், மாணவர் பணியிட நிர்ணய பிரிவு  கண்காணிப்பாளர் மற்றும் பணி யிட நிர்ணயம், நன்கு தெரிந்த ஒரு வட்டாரக் கல்வி அலு வலரை அவரவர் மாவட்ட புள்ளி விவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தவேண்டும். பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் தங்களுடைய மாவட்டத்தின் உண்மை தகவலை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.