tamilnadu

தமிழர்களும் சிங்களர்களும் ஆதிதிராவிடர்கள்!  இலங்கை விக்னேஸ்வரன் பேச்சு

 

சென்னை, ஜன.12- தமிழர்களும், சிங்களர் களும் ஆதி திராவிடர்களே என மரபணு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உல கத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் விக் னேஸ்வரன் பேசியதாவது:  தமிழர்கள் இலங்கையில்  சோழர் காலத்தில் குடியேறி யவர்கள் என்ற தவறான கருத்து பகிரப்பட்டு வருகி றது. இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்க தேவை யில்லை என்ற எண்ணம் இலங்கையில் உருவாகி யுள்ளது. தமிழர்களின் கட்டி டங்கள், பாரம்பரிய கோவில் கள் அழிக்கப்பட்டு சிங்க ளம் பெளத்தம் முன்னெடுக் கப்படுகிறது. தமிழர்களும், சிங்களர்களும் ஆதி திராவி டர்களே என்பது மரபணு  ஆராய்ச்சியில் தெரியவந் துள்ளது என்று கூறினார்.

;