தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவடி மாநகர ஆணையராக இருந்த தற்பகராஜ் ஐ.ஏ.எஸ், உயர்கல்வித்துறையின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஐ.ஏ.எஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவின் குமார் ஐ.ஏ.எஸ்., சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்..
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எல்.மதுபாலன் ஐ.ஏ.எஸ்., மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ண மூர்த்தி ஐ.ஏ.எஸ்., ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் தாகரே ஷுபம் தன்யண்டியோரோ ஐ.ஏ.எஸ்., திருநெல்வேலி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம் துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ்., சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ்., உலக & ஆசிய வங்கி திட்ட இணை மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி துணை ஆட்சியர் எஸ்.பிரியங்கா ஐ.ஏ.எஸ்., திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓசூர் துணை ஆட்சியர் ஆர்.சரண்யா ஐ.ஏ.எஸ்., கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.