tamilnadu

img

“பாஜகவின் அணிகளாக ஐடி, அமலாக்கத் துறை”

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் நீட் தேர்வுக்கு எதிராக சத்திய மூர்த்தி பவனில் கையெழுத்துகள் பெற்றார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி 50  நாட்களில் 50 லட்சம் கையெழுத் துக்களை பெற்று, சேலம் இளை ஞரணி மாநாட்டில் அதை சமர்ப்பித்து, குடியரசுத் தலை வருக்கு அதை அனுப்பி வைப்பது  தான் எங்களுடைய இலக்கு. ஆன்லைன் வழியாக தங்களது  கையெழுத்தைப் பதிவு செய்ய லாம். இதுவரை, 3 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள் ளோம்.

அதுபோல, 10 லட்சம் அஞ்சல் அட்டைகள் அச்சிடப்பட்டு, இது வரை 8 லட்சம் அஞ்சல் அட்டை யில் கையெழுத்து பெற்றுள் ளோம். வெள்ளியன்று கூட்டணிக்  கட்சித்தலைவர்கள் காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்அழகிரி, சட்டமன்றக் குழுத் தலைவர்  செல்வப்பெருந்தகை உள்ளிட் டோர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பி னர்கள், காங்கிரஸ் கட்சியைச்  சேர்ந்தவர்கள் கையெழுத் திட்டுள்ளனர். தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலை வர்களையும் சந்திக்க இருக்கி றேன்” என்றார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும்  வருமான வரித்துறை சோதனை  குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,  “அது வழக்கமாக நடப்பது தான்.  அதை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.