‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பொது மேடை சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான பிரச்சார வாகன பயணத்தை வெள்ளியன்று (ஏப்.5) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உடன் திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு பொதுமேடை அமைப்பாளர்கள் தியாகு, பேரா.வீ.அரசு, மனிதி செல்வி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.