tamilnadu

img

முதுநிலை மாணவர்களுக்கான விதியை தளர்த்தி தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அரசாணை வெளியீடு

முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம் 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் படித்து முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய பயிற்சிக்கு பிறகு முதுகலை படிக்க விரும்புகின்றனர். அந்த வகையில் முதுகலையில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதுகலையில் Non-service முதுநிலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டு காலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுகலை படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் ரூ.40 லட்சம் கட்ட வேண்டும் என்ற விதியை மாற்றி, ரூ.20 லட்சம் கட்டினால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர்கள் ரூ.20 லட்சத்துக்கு பதில் ரூ.10 லட்சம் செலுத்தினால் போதும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.