tamilnadu

சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு: தமிழ்நாடு அரசு காணொலி வெளியீடு

சென்னை, டிச.26 - சென்னையில் வருகிற ஜன.7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடை பெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான காணொலி ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ளது.

தமிழ்நாடு அரசு, ஒரு டிரில்லி யன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கிய பயணத்தின் முயற்சியாக உள்நாடு மற்றும்  வெளிநாட்டு தொழில் நிறுவனங் களின் முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள  வர்த்தக மையத்தில் ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் உலக முதலீட் டாளர்கள் மாநாடு நடத்துகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கான இலச்சினை (லோகோவை) முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளி யிட்டார்.

இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. 30க்கும் மேற்பட்ட நாடு களின் தொழில்துறை பிரதிநிதி கள் பங்கேற்கின்றனர். 150 தொழில்  முனைவோர் உரையாற்றினர். 150 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

இம்மாநாட்டிற்கு முன்னேற்பாடு கள் குறித்து தலைமைச் செயலா ளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து  வருகின்றனர். இந்த மாநாட்டில்  பல கோடி ரூபாய் மதிப்பு முதலீடு கள் குவியும் எனவும், ஆயிரக் கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த மாநாட்டை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. காணொலியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், தொழில் தொடங்க ஏது வான சூழ்நிலை, தமிழர்களின் திறமைகள் குறித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன.